காமராஜர் !

விருதுபட்டியில் முளைத்த விதையாய்
வெடித்து சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவு கூட்டை தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மை தோழனாய் நாடே
வீடு நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மது கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறை பட்ட சிங்கமாய்

ஏழைப் பங்காளராய்
கோழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்ணை
விதைத்த அறிவு பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமெண்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க ....

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரை வழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியால்

அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில் ....!



எழுதியவர் : hishalee (3-Sep-11, 10:14 am)
பார்வை : 56295

மேலே