நன்றி நவின்றேன் நான் கவிதையில்
கண்ணசைவில் நீஎன்கற்பனை வானத்து வாசலில்
நாடவைக் கத்தரித்து திறந்து வைக்கிறாய்
புன்னகையால் என்மனப் பூந்தோட்டத்தில்
புதியதாய் ஒருகாதல் ரோஜாவை பதியம் போடுகிறாய்
வெண்ணிலவு ஒருநாள் வாராது விடுமுறை எடுத்தாலும்
தண்ணிலவாய் தனிநிலவாய் தவறாமல் வந்து தரிசனம் தருகிறாய்
நன்றி நவின்றேன் நான் கவிதையில் !