மவுனம் அவள் கலை
மலரே! மலரே! - என்
சங்கீத சாரலே,
கலையோவிய கடலே,
சீற்றமேன் குளிர்விரே.
அலையே! அலையே! - உன்
மௌனத்தால் அடிக்காதே,
காற்றுயான் நடிக்காதே,
மற, அறிவேனென் வினையே.
பனித்துளியே! பனித்துளியே! - இன்
வாழ்விது, காலதேவன் கையிலே,
யாதுனலமுன் பொய்யிலே,
திற, அறிவேனுண்மை இதயமதையே.
இறைவியே! இறைவியே! - உன்
தேவதைச் சொந்தங்கள் போதுமே என்றிடுதே,
தாமதக்கனங்களால் உள்ளம் துடித்திடுதே,
பிராத்திக்கிறேன் காதலூடல் ஓயவே.
உயிரே! உயிரே! - என்
உயிர்க்கொடு, போதும் உயிர்க்கெடு,
நரக நிலையிது,
மவுனம் கலை, சொர்க நிலையருள்வீரே.