மறந்தாயோ

மறந்தாயோ உந்தன் நினைவுதனை
மறந்தாயோ
மறைப்பையோ எந்தன் நினைவுதனை
மறைப்பையோ
கொடுப்பதை எல்லாம்
கொடுத்துவிட்டு மெல்ல
நகர்ந்தது ஏனடி.
கொடுக்க மறந்ததனை
கொடுத்து கொள்வது ஏனடி.
இது முறைதானா சொல்லடி
இது முறைதானா
துணையற்று தூணுக்கு
பின் நிற்பது சரியோ.
திகைத்திடும் பார்வை
கொள்வது முறையோ.
வெண்ணைதனை உருக்கிடும்
வெப்பம் போல்
என்னையும் ஏனடி
உருகிட செய்தாய்.
அலைந்தேனே
தினம்...தினம்
அலைந்தேனே உன்னை தேடி.
தினம்...தினம்
அலைந்தேனே
ஒரு மனம் கொண்டு
ஒருமுறை இருக்கினாய்.
மறு மனம் கொண்டு
எனை பலமுறை உருக்கினாய்.
சங்கதி ஓன்று சொல்லுவாயென
சொற்களை தூண்டி நின்றேன்
ஓர் விதிதனை தீண்டி நின்றேன்
உங்கதி உத்தமமென
வாழ்வுதனை வேண்டி நின்றேன்.
சொல்வாயோ இல்லை
மறைவாயோ.
சொல்லிலே எனை
மறைப்பாயோ
சொல்லிலே எனை
புதைப்பாயோ.

எழுதியவர் : - ஐ - (22-Apr-19, 11:39 pm)
சேர்த்தது : ஐயெழுத்து
பார்வை : 91

மேலே