கணக்காயர்களுக்கு சமர்ப்பணம்

கணக்காயர்களுக்கு சமர்ப்பணம்


மனமே மனமே நீ மயங்காதே
குணமே குணமே
நீயென்றும் குறையாதே
நீயில்லையென்றால் நிலைமாறும் பூமி
நீதானே எங்க நெசமான சாமி !

அறிவுக்கு நீயென்றும் ஆதாரம்
அனுவளவுமில்லை அகங்காரம்
அனுதினம் எறும்பாய் நீ உழைத்து
அறிவுதனையே தான் கொடுத்து
அச்சந்தனையே நீக்கிடுவாய்
அகல் விளக்காய் நீ ஒளிர்திடுவாய் !

கருவறை தாயாய் அவதரிப்பாய்
கருணையோடு கற்றுத்தருவாய்
கலங்கரை விளக்காய் நீயிருப்பாய்
தவறுகள் செய்கையில் நீ பொறுப்பாய்
தோணியாய் ஏணியாய் நீ மாறி
ஞானிகளைத்தான் தந்திடுவாய்

வணக்கத்துடன்
மு. ஏழுமலை
9789913933

எழுதியவர் : மு. ஏழுமலை (25-Apr-19, 2:40 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 150

மேலே