மலரே மௌனமா 555

என்னுயிரே...


உன் குரல் கேட்கவே
தினம்
தினம் காத்திருக்கிறேன்...


என் கைபேசியை பார்த்து

கொண்டே இருக்கிறேன்...


ஒவ்வொரு வினாடியும்

யுகங்களாக நகர்கிறது...


உன் குரல் ஒலி என் கைபேசியை

தீண்டவே இல்லையடி கண்ணே...


உன் மௌனம் கலைத்து

எனக்கு உன் குரல்கொடு...


காத்திருக்கிறேன் நான்

ஒரு ஜீவன் உனக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-May-19, 7:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1575

மேலே