தேடுகின்றேன் உனை
அனலைப் படைத்து அதனை உடலில் புகுத்தி
உடலைக் காக்க நிரம்ப நீரைச் செலுத்தி
நீரினால் குருதியைக் கரைத்து நரம்பால் சுழலவிட்டு
நவரங்கமும் பரவ இருதயத்தை ஆக்கி
நாள் தோறும் புதுப்பிக்க களைப்பைக் கொடுத்து
களைப்பு நீங்க உறக்கமும் உறு பசியையும் கொடுத்து
உற்சாகம் அடைய சிறு மூளையையும் படைத்து
சிறப்பாக சிந்திக்க மனதை எங்கோ உடலில் வைத்து
ஒவ்வொரு நாளும் ஒருவாறு நாலு நிகழ்வைத் தந்து
ஒவ்வொன்றிலும் பெரிய சிறிய அனுபவங்காட்டி
தீர்வால் தெளிவையூட்டி தெளிவால் திடத்தைக் காட்டிய
தேவர்களுக்கெல்லாம் தேவே தேடுகின்றேன் உனை
தேடுவோர் மன மகிழ தேவையான உருவெடுத்து வா…
- - - நன்னாடன்.