நினைவுத் தீ

என் முனை உடைந்த
பேனாவின் கிறுக்கல்கள்
அவளின் நினைவுகளையே
நித்தம் நித்தம் நிந்திக்கிறது ...
பேறு காலத்தில்
என் பேனா
கவிதையாய்
அவளையே பெற்றுடுக்கிறது ...
அவளின் நினைவுத்துளிகள்
என் பேனாவின் மைத்துளிகள் ...
என் எழுத்தெல்லாம்
அவளின் எதார்த்தங்களையே
பதிவுசெய்கிறது ...
எரிமலையாய் என்னையே
எரிக்கிறது ...
கொழுந்துவிட்டெரியும்
காட்டில்
உயிருக்குப் போராடும்
ஒற்றை மரமாய் நான் ...

எழுதியவர் : வருண் மகிழன் (9-May-19, 3:59 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : ninaivuth thee
பார்வை : 155

மேலே