“ மனைவியின் மனதில் “

செவ்வானம் சிவந்திடவே, 
என்னவன் போனான்,
பரிதவித்து நின்றேனே,
பரிவாய் ஓர் வார்த்தையுண்டோ ?

முகம்மறியா மாந்தருக்காய்,
புன்முறுவல் சேவைசெய்ய,
தொடு தூர ஜீவனுக்கு,
கடு கடுத்த ப்பாவம் ஏனோ ?

உச்சிவெயில் வந்திடவே,
தனிமைதனை போக்கிடவே,
அழைபேசி எண்னை அமுக்கினேனே,
ஓர்வழியில் உரையாடல் ஏனோ ?

இருள்சூழ இல்லம் புக,
முகபுத்தகத்தில் மூழ்கினாயே,
முகநூலின் தழுவுதாலால்,
என் முகம் மறந்ததேனோ ?


உன் வாசம் நான்னறிய,
உன் அருகில் வர எத்தினித்தேன்,
களைப்பாற நீ உறங்கினாயே,
கனவிலாவது நான் உண்டோ ?


இல்லறம்மற்ற இந்த அவஸ்தையேனோjQuery171039014824927938674_1557945773589?
எதிர்காலம் என்று உரைத்தாயே,
நிகழ்காலம் இறந்து போக,
எதிர்காலம் இருந்து என்ன பயன் jQuery171045116335354094794_1557945889595?

அன்புடன்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபிஃக் (14-May-19, 9:59 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 941

மேலே