ஆனால் மனிதனோ

கோழி கூவியா
விடிகிறது ?
குயில் கூவியா
வசந்தம் வருகிறது ?
மயில் ஆடியா
முகில் சூழ்கிறது ?
சுழலும் பூமியில்
சுழலும் தருணங்களின்
தன்மை உணர்ந்து
இயற்கையோடு இயைந்து
உலவுகிறது பறவை இனம் !
ஆனால் மனிதனோ ...!!!???

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-19, 9:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : aanaal manithano
பார்வை : 106

மேலே