பட்டுவாடா

*ஒரு நிமிட கதை*

*பட்டுவாடா*

சபீனா பவுடரை தென்னை நாரில் தொட்டு தனது வீட்டின் வாசலில் அமர்ந்த வாரு பாத்திரங்களை நன்றாக அழுத்தி தேய்த்துக்கொண்டு இருந்தாள் *வளர்மதி*

பக்கத்திலேயே தனது மாட்டு தொழுவத்தில் கன்றுகுட்டியை பசு விடம் பால் கூடிக்கவைபதுபோல பாசாங்கு காட்டி , பசு மற்றும் கன்று இரண்டையும் ஏமாற்றி பாலை கரக்க தொடங்கினான் பல்கார முருகன் ( இவன் corporate criminal ku எல்லாம் மேல) , அப்போது அங்கு வந்த *லட்சுமி* வளர்மதி யிடம் அக்கா நாளைக்கு சுயஉதவி குழுக்கு சேமிப்பு காசு கட்டணும் , வீட்டுல அரிசி வேற இல்ல ஒரு 500ரூபாய் கடனா கொடுகா , அட்த்தவரம் நூறுநாள் வேலை சம்பளம் ஏறிடும் எடுத்து தரேன் கா.

அடியே ஏன்டி கவல படுற பக்கத்து தெருவுல நம்ம கட்சி காரங்க காசு கொடுத்துடாங்க, இன்னைக்கு நைட்ு நம்ம ஏறியா தான் , நீ நைட்டு ஜன்னல்ல மட்டும் திறந்து வச்சு துங்கு காலைல உன் பிரச்சன முடிஞ்சது , don't worry ......


அவள் வீட்டுக்குள் தொலைகாட்சியில் விரைவு செய்தியில் ஓடிக்கொண்டு இருந்தது

*அதிக பண பட்டுவாடா காரணத்தால் அப்பகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் ரத்தானது என்று*

*மகிழன்@ அருண்*

எழுதியவர் : மகிழன் @ அருண் (19-May-19, 5:24 pm)
சேர்த்தது : மகிழன் அருண்
Tanglish : pattuvaada
பார்வை : 98

மேலே