கல்லெல்லாம்

கல்லெல்லாம்...
===================================ருத்ரா

காகிதம் தேடி
பேனா வருடி
எழுத்தும் சொல்லும்
நெய்து
உனக்கு ஒரு கவிதை
எழுதுமுன்னே
அந்த மௌனத்தடாகத்தில்
உன் சிரிப்பு
"க்ளுக்" என்று
ஒரு கல்
எறிந்ததே.
அதுவே நான் தேடிய கவிதை
எனும் மாணிக்கக்கல்.

=========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (30-May-19, 3:25 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 160

மேலே