தமிழ் வாழ்த்து

முத்தமிழாய்ப் பூத்தாளை மூச்சில் நிறைந்தாளைத்

தித்திக்கும் தேனாய்த் தெவிட்டா திருப்பாளைப்
பத்தரை மாற்றுப் பசும்பொன்னாம் தூயவளைப்
புத்தியைத் தீட்டிப் புகழெய்த வைத்தாளை
வித்தைபல கற்பித்து வெற்றிக ளீந்தாளை
இத்தரணி யேவியக்கும் ஈடிணை யற்றவளை
எத்திக்கும் போற்றும் எழில்கொஞ்சும் தாயவளை
நத்தி யுறவாடி நன்றியுடன் வாழ்த்துவனே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Jun-19, 1:39 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 219

மேலே