கண்ணம்மா கண்ணம்மா

நீர் இன்றி வானம்
நிலம் காய்ந்து போகும்...
நம் காதல் உயிர் தாங்குமே...

காலங்கள் தந்த
காயங்கள் யாவும்...
கடலோடு கரை சேருமே...
தேனான பாடல் இங்கு
இசையின்றி ஊர் போகுமோ...

கண்ணம்மா...கண்ணம்மா...

தாளாத பாரங்கள்
தரை மீது சாயும்...
பாடாத ராகங்கள்
தடம் இன்றி போகும்...
சோகங்கள் விரட்டி
சோறு உண்டு வாழ...
உன் பாசம் வழி காட்டுமே...

கண்ணம்மா...கண்ணம்மா...

எழுதியவர் : மதனகோபால் (7-Jun-19, 9:35 pm)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : kannamma kannamma
பார்வை : 267

மேலே