முத்து மாலை தேடும் பிள்ளைகள்

மாலையாகத் தான்
இருந்தது இதுவரை

உரசல் அதிகமாகி
அறுந்து விழுந்துவிட்டது ,

முத்துக்களும் கயிறும்
இரு கூறுகளாய் .

தர்க்க நியாய மொழியும்

ஆறுதல் ஒலிகளும்
குழந்தைக்குப் புரிதல் தரவில்லை

முகத்தில் மிரட்சிப் பார்வை
"முத்துமாலை காணவில்லை" -

குழந்தை தேடிக் கொண்டிருக்கிறது .

எழுதியவர் : Dr A S KANDHAN (11-Jun-19, 8:31 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 485

மேலே