உள்ளதை பகிர்ந்தால்

உயிரற்றுப் போனால் பிணமாவாய்
உணர்வற்று போயின் சடமாவாய்

மதி பிறழ்ந்தால் பைத்தியமாவாய்
மதி தெளிந்தால் வைத்தியனாவாய்

உன்னை அடக்கின் ஞானியாவாய்
உள்ளம் சிதைத்தால் மூடனாவாய்

உள்ளதை பகிர்ந்தால் வள்ளலாவாய்
உரிமைகளைக் கேட்டால் தலைவனாவாய்

கள்ள மனங்கொண்டால் திருடனாவாய்
காம எண்ணங்கொண்டால் நோயாளியாவாய்

உள்ளத்தில் சிறந்தால் நல்லவனாவாய்
உயிராக ஒழுக்கம் பேணால் உத்தமனாவாய்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jun-19, 9:00 am)
பார்வை : 297

மேலே