பூமித்தாயே

ஓலைச்சுவடியில்
மட்டும்
பல வரலாறுகள்
மீசை முறுக்கி
கம்பீரத்துடன்
கட்டுண்டு கிடக்க
ஓலைச்சுவடியோ
ஒளிந்து கிடக்கும்
இடமறியாமலும்
பரணியில் போட்ட
பழைய பொருளாகவும்
நீண்ட நாள் புதையுண்டு
மண்ணில் மட்கிப்போன
பல கரையான்கள்
பல முறை அரித்தும்
சிதைந்து போய்
சின்ன சின்ன
துகள்களாக
காற்றோடு காற்றாக
கலந்தும்
கரைந்தும்
கடந்தும்
எங்கேயோ தொலைந்துவிட
பல வர்ணங்கள் தீட்டப்பட்டும்
ஆதி அணு அழிக்கப்பட்டும்
தனக்கே தன்னையே
அடையாளம் அறியாதவாறு
பல அச்சுகளிலும்
பல அகழ்வாராய்ச்சிகளிலும்
கிடைத்தும்
கிடைக்காமலும்
அனாதையாய்
கைவிடப்பட்ட
உன் முன்குடி மக்களின்
மூடப்பட்ட
மறைக்கப்பட்ட
உண்மைகள்
உனக்கு தெரியுமா ?
தெரிந்தும் மௌனமா ?
பூமித்தாயே!!!

எழுதியவர் : வருண் மகிழன் (13-Jun-19, 7:30 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 365

மேலே