உழுபவனே உரமாய்

யான் விதைத்த மண்ணில் - இன்று
நானே விதையாகிறேன்!
வறுமையாலும் வெறுமையாலும் நான் மரிக்கவில்லை,
பச்சைப்புரட்சி மரணிக்கக்கூடாது எனவே!
வெள்ளாமை ஏற்க வேண்டிய நிலத்தை - இன்று
வெண்சுவர் ஏற்று நிற்கிறதே என்று!
களம் கண்ட கை என்றும்
கரம் ஏந்த கூடாதே என்று!
வேற்றுமனிதனாய் வெற்றுப்போனேன்,
தொழில்நுட்பத்தாலோ இன்று!
நச்சுத்துளியின் விளைவால் விதவை நெற்றிப் போல்,
என் பூமி கிடக்க
என் வாழ்வை நான் போராளியாய் முடிக்கிறேன்!

எழுதியவர் : arhtimagnas (13-Jun-19, 11:14 pm)
சேர்த்தது : Sara Tamil
பார்வை : 3869

மேலே