பூவையும் பூக்களும்

பூவெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு
தனிப்பூவின் அழகை ரசித்து பார்க்க
ஒன்றாய்க் கூடின ஒரு பூக்காரி கடையில்,
பின் பூக்காரியிடம் பேச தொடங்கின
ஆச்சிர்யத்தில் பூக்காரியும் என்னவென்று கேட்க
அவை ஒன்றாய் சேர்ந்து ஒரே குரலில்
'அம்மா நாங்கள் அதோ பார் அங்கு தனிப்பூவாய்
நின்று காதலனுக்கு வழிமேல் விழிவைத்து
நிற்கிறாளே ஓர் பூவிழியால் அவளுக்கு
அழகு பார்க்க ஆசைப்படும் பூக்கள் .... நீதான்
எங்களுக்கு உதவ வேண்டும் என்க ' பூக்காரியும்
அழகாய் மலர்ந்த அப்பூக்களை நலங்காமல்
கொள்ளாமல் அழகிய பூச்சரமாய் தொடுத்து
அந்த பூவையின் கொண்டையில் 'கதம்ப'
பூச்சரமாய் அலங்கரிக்க, பூவை அவள்
அதனை பூக்களிலும் அழகு பூவாய்
மிளிர, பூக்களெல்லாம் ஆனந்தம் அடைந்தன
பூக்களில் இவள் ராணிப்பூதான் என்று ஆர்ப்பரித்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jun-19, 8:35 pm)
Tanglish : poovaiyum pookkalum
பார்வை : 1680

மேலே