அவள்

சிற்பி செதுக்காத பொற்சிலைபோல்
சித்தம் கலங்கும் பேரழகாய் என் எதிரே
சிரித்து சிரித்து கன்னங்கள் சிவக்க
அதில் குழி இரண்டு என் மனதில் ஏதோ
காதல் இன்பம் சேர்க்க என்னவள்
வாய் திறந்து 'அன்பே வா' என்றழைத்தால்
அது என் காதில் கற்பு மங்கையின் கால்
விரலில் அணிந்த மெட்டி ஒலியின் இனிய
நாதமாய் வந்து தேனாய் பாய்ந்தது அதில்
என்னவளின் ஒழுக்கத்தின் இலக்கணமும்
தெள்ளத் தெளிவானதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jun-19, 8:23 pm)
Tanglish : aval
பார்வை : 341

மேலே