காதல் மோகம்
ஒரு வழிப் பயணம் தான் உள்ளத்தில்,
ஒருமுறையாவது சொல்வாயா என்ற ஏக்கத்தில்,
தினந்தோறும் காத்திருக்கிறேன் வெவ்வேறு கோணத்தில்,
உன் மூச்சுக்காற்று தீண்டிச் செல்லுமா என்ற ஏக்கத்தில்,
மீனுக்காய் காத்திருக்கும் கொக்கைப் போல தாகத்தில்,
ஏனோ அன்று வந்தாய் மனச் சோகத்தில்,
என் மீது வார்த்தையை அள்ளி வீசிச் சென்றாய் கோபத்தில்,
ஒன்றும் புரியாதவனாய் நின்றேன் நான் நிதானத்தில்,
சென்றேன் அவ்விடத்தை விட்டு காதல் மோகத்தில்,
இப்போது தொடர்கிறேன் வேறொரு ஒரு வழிப் பயணத்தில்........