என்னை

தாமரையாய் என்
தவம்

சூரியனாய் உன்
தழுவல்

அகம் மலர்ந்தேன்

மலர் முகத்தோடு
எதிர்பார்த்து

என் காத்திருப்பு
தொடர

பொழுதை போக்கி

போனாயோ என்னோடு

நீ வருவாயென
குளத்து

தாமரையாய் நான்
நிற்க

செலவு கணக்கு
காட்டிவிட்டாயோ

நீ என்னை..,

எழுதியவர் : நா.சேகர் (10-Jul-19, 1:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ennai
பார்வை : 423

மேலே