விலங்கும் மனிதனும்
நம்மைப்போலவே விலங்கினங்களுக்கு
வாய் தந்த இறைவன் அவற்றை நம்மைப்போல்
பேசவைக்கவில்லையே ஏன் , அப்படி அவை
பேசினால் நம்மீது வசை மாறி பொழிந்திடுமோ
நாம் அவற்றிற்கு செய்யும் கொடுமைகளை
தாங்காது மனம் கொதி கொதிக்க , அதைகேட்டாவது
நாம் நம்மை திருத்தி மாற்றிக்கொள்வோமா
இல்லை நாம் விலங்காய் இருந்துவிடுவோமா ?