முதுமொழிக் காஞ்சி 86

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முதிர்வுடை யோன்மேனி யணிநல்கூர்ந்த தன்று. 6

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மூத்த உடம்பினை யுடையான் அணியுமணி வறுமையுறும்.

கிழப்பருவமடைந்தவன் உடம்பில் அணியும் ஆபரணம் அழகு செய்யாது.

யௌவனர் அணியும் ஆபரணம் செய்கையழகைத் தந்து சிறக்கும்: வயோதிகர் அணியும் ஆபரணம், சிறவாமல் விகாரத்தை உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-19, 10:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே