என் கனவே நீயே

அழகே அழகே
கனவு நீ தான்
கவிதை வரைய
நினைவு நீ தான்

இதயம் இதயம்
இணையும் நேரம்
கலையும் எனது
கனவு உலகம்

கண்ணில் நீரை பார்க்கிறேன்
காதலை இழந்து வாடுறேன்
எதற்கு இந்த சாபம் என்று
எனையும் கேள்வி கேட்கிறேன்

ஆ ஆ
பாதை கூட மாறினேன்
பயணம் கூட மாற்றினேன்
சோகம் மட்டும் கைய ஏந்தி
பாதை எங்கோ போனது

இது காதலா
இல்ல சாதலா
இந்த மௌனமே
இங்கு போதுமே

கவிதை கவிதை
நானும் எழுதி
கவிஞன் ஆக
மாறினேன்
பொழுதை கூட
நானும் கடந்து
கடைசியாக
சாகிறேன்

எழுதியவர் : கணேசன் நயினார் (29-Jul-19, 4:08 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : en kanave neeye
பார்வை : 3487

மேலே