வளர்ப்பு அன்னை

இங்கிலாந்தின் தென் மேற்கு
துறைமுக கரையோரம்;
பரந்து விரிந்த
அழகு நீல ஆழக்கடலை ரசிப்பதா
இல்லை யார் கடலை ஆக்கிரமிப்பது
என்று போட்டியிடும் கப்பல்களை
கண்டு பிரமிம்பதா ;
கொளுத்தும் வெய்யிலிலும்
இதமாய் தென்றல் தாலாட்டும்
இயல்புடைய மண்ணில்
காலார நடை பயிலும் என் கால்கள்
அதி காலை வேளையில்
பூங்காவனத்திற்குள் நுளைய;
நிலவொளி மறையும் பொழுதினிலே
கதிரவனின் கீற்று மலரும் பூக்களின்
மேல் பனித்துளியில்
வண்ண கோலங்களை தோற்றுவிக்க;
மனம் துள்ளும் புத்துணர்வுடன் களிப்புற;
அந்நிய தேசத்தில்
அந்நியமாக தோன்றாது
உரிமையுடன் நாம் வாழ துணை
மனிதத்தை நேசிக்கும் அயலவர்கள்;
தேசமற்ற அடிமைகளுக்கு
குடியுரிமையும் தந்து சோறும் போடும்
வளர்ப்பு அன்னையே
நீ என்றும் என் சந்ததியால்
நன்றியுடன் நினைவு கூறப்படுவாய்!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (30-Jul-19, 11:44 am)
Tanglish : valarpu annai
பார்வை : 121

மேலே