அவள் கண்ணழகு
நீல வான வெண்ணிலா வானத்தில் ஒரே நிலா
நீண்ட நீரோட்டம் காணும் உந்தன் கண்ணுக்குள்ளே
நான் காண்பதோ ஆயிரம் நிலவு அதுவும்
ஒவ்வொன்றும் ஒரு தனி நிலவாய் உந்தன்
கண்ணின் பேரெழிலின் அங்கம் அங்கமாய்
ஒரே வான் நிலவின் அழகில் மயங்கிய நான்
கண்ணே உந்தன் கண்ணில் ஆயிரம் அழகு
நிலவுகளைக்கண்ட பின்னே சொல்வது
தெரியாது நிற்கின்றேன் என் காதல் தெய்வமே
கன்னியே கண்ணியே காமாட்சி