ஆழ்மனதின் ஆற்றலே

ஆழ் இதயத்தில் வைத்து துதித்து
ஆராதித்து அன்புருக நோக்கி
அகக்கண்ணால் கண்டு இன்புற்று
ஆனந்த நிலையிலே அகிலம் மறந்து

கண்டதைக் கூற இயலாமல்
கன்னித் தமிழில் வார்த்தைத் தேடி
கருப்பொருளின் மூலத்தினை
கவியாய் புனைய கண்மூடி தியானித்து

உள்ளத்தால் உணர்ந்த உண்ணதத்தை
உலகறிய உரைக்க உறை செய்ய நினைத்து
உன் நிலையை உள்ள வாங்கிய எனை
உழவார பணி செய்ய வைப்பாயோ இறையே

அஞ்சி அகம் குளிர்ந்து அடிபணிந்த என்னுள்
அமைதி நிலையிலே ஆர்ப்பரித்த உனை
அதி அற்புதமாய் கண்ணுற்று இந்த
அற்ப மானிடத்தின் அருமை உணர்ந்தனே ஆதியே !
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Aug-19, 7:16 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 110

மேலே