அமித்ஷாவால் அரண்டு போன பசி
முன்னாள் பாரத நிதித்துறை அமைச்சரை
இன்னாள் பாரத உள்துறை அமைச்சர்
மத்திய புலனாய்வுத் துறையினரை ஏவி
மதில் ஏறிக்குதித்து கைதாக்குகின்றார்– இது
மகத்துவமான நிகழ்வாய் சித்தரிக்கப்படுகிறது
இன்னாள் உள்துறை அமைச்சர் - குஜராத்தில்
முன்னாள் அமைச்சரான போது
முன்னாள் பாரத நிதியமைச்சர்
மத்திய புலனாய்வுத் துறையினரை ஏவி
கைது செய்தது கசப்பைத் தந்ததோ
காசுக்கான காரணமோ அல்லது
கசப்புக்கான காரணமோ கைது
கருப்பொருள் ஏனோ விளங்கவில்லை நமக்கு
கருவாட்டுக் கடையில் நடக்கும்
கடுஞ்சண்டை போல் படுது நம் நெஞ்சில்
கருப்பு அங்கியினரின் கடும் வாக்குவாதம்
களை கட்டுகிறது உயர் நீதிமன்றத்தில்
காட்சிப்படுத்தி ஊடகங்கங்கள் பெருமிதத்தில்
இரு கட்சிகளின் விரோதம் ஏளனமாய்
இந்தியர்கள் என்ற மக்கள் மன்றத்தில்
சிதம்பர இரகசியம் சிலிர்க்க வைக்குது
சீக்கிரம் வெளியிட அமித்ஷா துடிக்குது
அதற்காக அரசு தலை மோடியும் விரும்புது
அரசியலமைப்பு அதற்குரிய ஆயுதமா இருக்குது
அடுத்தடுத்த நகர்வில் தெரியும் முடிவு எதுவென்று.
---- நன்னாடன்.