கவி யிருக்கும் வரை
மை தீர்ந்தப் பேனா
முடக்கிடுமோ அவனை?
வார்த்தைகளின்
வார்ப்புக்குத் தானேக் காகிதம்,
விளை நிலம் நெஞ்சமன்றோ!
மூடிய கானகம்
பயமூட்டுமோ அவனுக்கு?
படைப்பை
வாசிக்கத்தானே மானுடம்,
வாரித்தருபவள் இயற்கையன்றோ!
தனிமை
தளர்த்திடுமோ அவனை?
காப்பியங்களைக்
கொண்டாடத்தானேக் கூட்டம்,
கருவுற்று ஈவது மொழியன்றோ!
இறப்பினில் முடிந்திடும்
பிறப்போ அவன்?
படைத்த தன் பதங்களில்
பல யுகங்கள் தாண்டி வாழும்
கவிஞன்றோ..!
அவன், கவிஞன்றோ!