தியாகம்

வாழை நெடிது வளர்ந்து
வாழை இலை விரித்தது
வாழைப்பூ பூத்து
வாழை காயுடன் குலை தள்ளியது
எல்லாம் அறுத்து எடுத்துச் சென்றான் தோட்டக்காரன்
வாழை மரத்தையும் ஒருநாள் வெட்டிச் சென்றான் !
தாய்வாழை போல் உனக்கு எல்லாம் நானும் தருவேன்
என்னை வளர்க்கும் எஜமானே என்று நன்றியுடன் சொன்னது
பார்த்திருந்த பக்கக் கன்று !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-19, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : thiyaagam
பார்வை : 226

மேலே