காதல்

என்னைப் பார்த்த நீ நான்
உனைப் பார்க்கையில் தலைகுனிந்து
உன் கால் விரல்களால் மண்ணில்
கோலம் வரைந்தாய், இதயகமலம்
அது நீ என்மீது கொண்ட காதல்
என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாய் நீ
நீ மண்ணில் வரைந்த கோலம்
என் மனதில் அழியா 'இதயகமலமாய்'
பதிந்துவிட்டது ……...அன்று பார்த்து
என் மனதில் புகுந்த உன்னை மறக்க முடியவில்லையே
உன்னைத் தேடி அலைகிறேன் என்
இதயக்கமலமே எங்கு சென்றாயோ நீ
உன்னை மறக்க முடியவில்லையடி பெண்ணே
என் மனம் உனக்காக துடிக்கிறது
நான் வாழும் ஒவ்வொரு நொடியும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Sep-19, 8:04 pm)
Tanglish : kaadhal
பார்வை : 244

மேலே