விலகிவிட்டேன்
விட்டுக் கொடுக்காத பிடிவாதம்
முரண்டு பிடிக்கும் கோபம்
சடுதியில் எடுத்த முடிவு எல்லாம்
தொடரமுடியாது தோற்றுவிட
கொஞ்சநேரத்தில் சமாதானமாகும்
என எதிர்பார்த்து
பொய்யாய் விலகி இருக்க அடிக்கடி
நமக்குள் நடக்கும் இந்தவிளையாட்டில்
அமைதியாய் நீ இருக்கும் அந்த
நொடிகூட
என்கோபத்தை தூண்டும் என்பதை தெரிந்து இப்பொழுது
அமைதியை கடைபிடிப்பது என்னை
உன்னிடம் இருந்து விலக்க
நீ செய்யும் தந்திரம் என்று புரிந்தப்பின்னே
மெல்ல விலகுவதே சரியென நானே விலகிவிட்டேன்..,