பெண்ணிலா

விண்வெளியின் ஓடைதனில் வெண்ணிலவு மிதக்கும்
வெட்கமெனும் ஆடைகட்டி விரகத்திலே குளிக்கும்
விண்மீனாம் காதலனின் விழிபார்க்கத் தவிக்கும்
வேதனையைச் சொல்லாத வெம்மைதனைத் தணிக்கும்
தண்ணொளியைக் கண்ணீராய்த் தரையெங்கும் விரிக்கும்
தனிமைக்குத் துணையின்றித் தன்னைத்தான் உருக்கும்
பெண்ணென்று பிறந்ததனால் பெருந்துயரம் சகிக்கும்
பிணிகொண்டு ஓரிருநாள் பேரிருளை அணைக்கும்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Sep-19, 2:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 129

மேலே