ம முதல் சொல் கவிதை

மருத்துவம் எல்லாம்
போலியாய்ப் போனதே/
மருத்துவர்கள் எல்லோரும்
எமனாய்ப் போனார்களே /

மருத்துவமனையில் மர்மக்
கொலை தொடர்கின்றதே/
மக்களின் நெஞ்சமோ
பயத்தின் எல்லையிலே/

மனமோ பதறுது
கதறுது நோக்கையிலே/
மகப்பேறு விடுதியும்
தூமையின்மைக் காட்சியினிலே/

மனிதம் மரணித்த
தாதியர்களின் அட்டகாசத்தாலே/
மனநோயாளியாய் மாறுகின்றனர்
கர்ப்பிணித் தாய்களுமே/

மதிப்பற்றுப் போகின்றது
தாயின் உணர்வானது
மறைக்கப் படுகின்றது
அரங்கேறும் நிகழ்வுகள்/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Oct-19, 8:49 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 108

மேலே