விசித்திரமான மனிதர்கள்

விசித்திரமான மனிதர்கள் 😡😠😭

காடுகளை அழித்துவிட்டு மரம் நடும் பயித்தியங்கள்.
விளை நிலங்களை வீட்டு மனை ஆக்கிவிட்டு அடுக்கு மாடி கட்டிடம் கட்டி மாடி தோட்டம் அமைக்கும் விசித்திர மனிதர்கள்.
மண்னை மலடாக்கிவிட்டு நல்ல பயிர்களை எதிர் நோக்கும் பேராசைகாரர்கள்.
மழை நீரை சேமிக்காமல் எல்லா நீரையும் கடலில் கலக்க விட்டு தண்ணீருக்காக கண்ணீர் விடும் பரிதாம மானுட கூட்டம்.
மணல் கொள்ளை அடிக்க விட்டு நிலத்தடி நீர் மட்டம் பூஜ்யத்தை தொட்டுவிட்டதே என புலம்பும் முட்டாள் மனிதர்கள்.
இயற்கையை சீரழிந்த மனிதன்
அதே இயற்கை சீற்றத்தால் சின்னாபின்னம் ஆக்க படுகிறான்.
மானுடா இயற்கை உன்னிடம் மன்னிப்பு கோரவில்லை
இயற்கையை நேசி, காதலி,விரும்பு
இயற்கையுடன் கை கோர்த்து வாழ பழகு
அது அதுவாக இருக்கும் .
நீ நீயாக இருப்பாய்.

- பாலு.

எழுதியவர் : பாலு (11-Oct-19, 4:53 pm)
சேர்த்தது : balu
பார்வை : 243

மேலே