செவப்பி - அத்தியாயம் 15
செவப்பி அத்தியாயம் 15
========================
'என்னடா இவன்...'
'தங்கச்சி கல்யாணம் பாதிக்கும்.. கொஞ்சம் ஒழுங்கா இருடானு சொல்லப்போனா.. தனக்கே கல்யாணம் வேணானு சொல்லி தலையில குண்ட போடறான்', என யோசித்துக் கொண்டே தூங்கிப் போனார் பார்வதியம்மா...
அடுத்த நாள் காலை, தோட்டத்திலே உட்கார்ந்திருந்த ரகுவிற்கு செவப்பியின் குரல் கேட்டது.
"என்ன ரகு.. உனக்கு ஏதாவது பிரச்சினை வந்திடும்னு பயப்படறியா.. அப்படியெல்லாம் எதுவும் ஆக விடமாட்டேன்.. கவலைப்படாதே.."
"இன்னொன்னு.. நீ ஏன் கல்யாணம் பண்ணமாட்டேனு அத்தைகிட்ட சொல்லிட்டு இருந்த..?"
"ஒழுங்கா முடிய மாத்திக்கோ.."
"முடியாது செவப்பி.. என் மனசு புள்ளா இப்பவும் நீ தான் இருக்க.. எப்பவும் நீ மட்டும் தான் இருப்ப.. இப்ப நீயே சொன்னாலும் என்னால எதுவுமே பண்ண முடியாது"
"உனக்கென்னப்பா.. ஆவியா மாறி சுத்திகிட்டு இருக்க.."
"காதல மனசுல சுமந்துகிட்டு, அது நிறைவேறப் போறதே இல்லேனு தெரிஞ்சுக்கிட்டு, வாழ்ற வலியிருக்கே அது வாழும் போது தான் தெரியும்... நீ வேற என்ன வேணும் சொல்லு.. செய்யத் தயார்.."
"நான் உன்னை மட்டும் தான் லவ் பண்ணேன்.. பண்றேன்... பண்ணுவேன்.. இதுல எந்த விதமான மாற்றமும் இல்ல.."
"வேற எவளையாவது காதல் பண்ணு, கல்யாணம் பண்ணுனு சொல்லிட்டு இருக்கற வேளைய இத்தோட விட்டுடு செவப்பி"
"சரி.. சரி.. ரொம்ப நேரமாச்சு.. நீ கெளம்பு கெளம்பு.. உங்க வீட்ல.. தேட மாட்டாங்க..", எனச் சொல்லி நாக்கை கடித்துக் கொண்டான் ரகு.
அப்போது சட்டென வந்து விழுந்த செவப்பியின் கண்ணீர், காற்றுக்கு கூட தெரியவில்லை..
(தொடரும்)