சாதீ

சாதீ

அணைந்தது என எண்ணினேன்!
இல்லை!
இத்தனை காலம் புகைந்து கொண்டு
இருந்திருக்கிறது!
பற்றோடு படர்ந்தால் பங்கம் இல்லை!
பற்று வெறியானால்;
அங்கே தான் மூள்கிறது
சாதித் தீ!
சீருடை ஒன்றென்றாலும்
கையில் கயிறுகள்
பிரித்துக் காட்டிவிடுகிறது!
ஆம்!
பள்ளியிலும் பற்றிவிட்டது
சாதித் தீ!
ஆள் பார்த்துத் தென்றல் வருடுவதில்லை;
குலம் பார்த்துத் தீயும் சுடுவதில்லை!
மனிதன் தீண்ட மட்டும்
சாதிச் சான்று வேண்டுமா?
மனிதம் தீண்டாமல்
மாணவனைத் தீண்டியிருக்கிறது
தீண்டாமை!
ஆதிக்கம் அறிவித்திருக்கிறது;
முதுகைக் கிழித்து,
குருதி மையில்,
"சாதிவெறி இன்னும் ஒழியவில்லை" என்று!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (15-Oct-19, 6:41 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 679

மேலே