அகத்தில் புலம்பல்

அண்ணா அனுப்பிய காசில்
அம்மா சேமித்து வைத்து
அரசாங்க உத்தியோக மாப்பிள்ளையென
அள்ளித்தந்ததெனக்கு பத்துலட்சம்!

கலியாணச்செலவும்
கல்யாணக் கலகலப்புமென
கரைந்தது ஐந்து லட்சம்
கடைசியாயிருந்தது ஐம்பதாயிரம்!

அடித்துப்பிடித்து ஒரு வீடெடுத்து
அலயாமல் வேலைக்குப்போக ஒரிடத்திலமர்ந்து
ஆரம்பித்தோம் வாழ்க்கையை
அரைவாசியும் போய்விட்டது வாழ்க்கையாரம்பிக்க!

எஞ்சியிருப்பதென்னவோ
எம்முடைய வேலைதான்
ஏறிக்கொண்டே போகிறது விலவாசி
எப்படித்தான் வாழ்வது!
.........
யோகராணி கணேசன்
01.ஆனி.2012

எழுதியவர் : யோகராணி கணேசன் (18-Oct-19, 10:29 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 1227

மேலே