என்னவள் மலர்

மலர்களின் மீது எனக்கு ஓர்
அலாதி ஆசை , மலர்களின்
மென்மை, வசீகரம் மற்றும்
மலர்கள் பரப்பும் வாசம் ......
என்னவளே உன் அழகில்
மலரின் அழகு தெரிகிறது
நீ பேசும் மொழியில் மலரின்
மனதைத்தொடும் வாசம் பரவிநிற்கின்றது
உன் மெல்லிய கரங்கள் என்னை
அணைக்கையிலே பெண்ணே
மலரின் மென்மைக் காண்கின்றேன்
ஈசனே உகந்தேர்ப்பது மலர் என்பதில்
தூய்மை தெள்ளத் தெளிவாகிறது
நீ என் மீது கொண்ட நேசத்தில்
தெய்வீகம் காண்கின்றேன் அதில்
அந்த மலரின் தூய்மை ....

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (21-Oct-19, 7:42 pm)
Tanglish : ennaval malar
பார்வை : 127

மேலே