நுங்கு வண்டி

நுங்கை வெட்டிக் குடித்த பின்னே
நுழைத்துக் குச்சியால் வண்டி செய்தோம்..

மேடு பள்ளம் ஓடும் வண்டி
மேன்மை மிக்கக் கிராம வண்டி..

பள்ளி சென்று வந்த பின்னே
பாய்ந்து செல்லும் நுங்கு வண்டி..

பாவையர் வந்து சேர்ந்து கொள்வர்
பார்க்க வந்திடும் சொந்த பந்தம்..

கேட்ட கதையாய் ஆனதே யின்று
கேட்டும் வராதே அந்தக் காலமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Oct-19, 7:34 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 134

மேலே