அந்த இருவரும்
ஒருவன் எருமை மாடு
என்று சொல்ல
அடுத்தவன் அதையே
இவனை பார்த்து சொல்ல
ஒரே வகுப்பில் படிக்கும்
இரு மாணவர்களுக்கிடையே
அடிபிடி சண்டை,
வகுப்பில் கூக்குரல்
வேதனையோடு
ஏனைய மாணவர்கள்
ஆசிரியர் கடுங்கோபத்தில்
அடக்கும் விதமாக
இருவரையும் பார்த்து
“ டேய் பசங்களா,
இங்கு நான் ஒருவன்
இருக்கிறேன் என்பதையே
மறந்து விட்டீர்களா?” என
அதட்டினார்,
அமைதியானார்கள்
அந்த இருவரும்.