ரோஜாவை

ரோஜாவை
இதழ் இதழாகப் பிரித்து
நாவில் இட்டு கடித்துச் சுவைப்பது
அழகுணர்ச்சியற்ற கொடுமை கொடுமை !

ரோஜாவை
கசக்கிப் பிழிந்து
அத்தராக்கி பூசிக்கொள்வது
அதனினும் குரூரமான கொடுமை !

ரோஜாவை
ஓர் அழகிய பெண் பறித்து
காதோரத்தில் சூடிக்கொள்கிறாள்
அதுவும் அவ்வளவு சரியில்லைதான்
ஆனால் அழகுடன் அழகு சேரும் அழகியலை
விதிவிலக்காக அனுமதிக்கலாம் !

ரோஜாவை
அதன் செடியில் காற்றில் தென்றலின் அசைவில்
ஆடும் அழகினில் அதை அப்படியே ரசிப்பதுதான்
ஒரு கவிஞனுக்கும் கவிதைக்கும் அழகு
ரோஜாவுக்கும் மகிழ்ச்சி !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-19, 10:03 am)
Tanglish : rojavai
பார்வை : 134

மேலே