குருவிடம் சமர்ப்பணம்

உள்ளத்துள் நிகழும் நடுக்கம் மௌன ரேகைகளாய் பரவிட,
தருணம் கடக்கையில் என் நிலை பற்றிய அச்சம்
விடையற்ற கேள்விகளாய் உடன்செல்லும்...!

பின் தொடர்வாய் நம் முன்னோர்கள் வாக்கும் கூட,
விதைப்பவனே அறுப்பவனாய் தோன்றும் எண்ண அலைகள்.

ஒளி மிகுந்த வாழ்வைஎதிர்நோக்கும் பயணம்...
குருவிடம் வேண்டுதலாய் சமர்ப்பணம்..
ஒளியேற்றும் வாழ்வை வேண்டியும் செய்யபடும் தவமாய்....!

பாதை கடினமாயினும், நேரம் குறைவாயினும்,
கடந்து செல்லவே பயிற்றுவிக்கப்பட்டேன்,
கடப்பதை காரியமாக கொண்ட நான்.

எழுதியவர் : ஜெ தனபால் (11-Nov-19, 9:56 pm)
சேர்த்தது : ஜெ தனபால்
பார்வை : 65

மேலே