நாம் எட்டமுடியும்

உயர் பண்பு , நந்நடத்தை
ஒருவரை உயரச்செய்யும்
மரியாதை தந்து மகுடம் சூட்டும்
மக்கள் மனத்தில் அமரச் செய்யும்,
அவமானம் அப்படியல்ல

ஒருமுறை அவமானப்பட்டால்
ஆயுள் உள்ளவரை
அகலாது மனதை விட்டு,
மற்றவர்களிடமிருந்து
மரியாதையும் கிடைக்காது

அகங்காரம் தலைக்கேறினால்
அவமானம் அடிமனத்தில் அமரும்,
பிறர் அவமானப் படுத்தினால்
பொறுமையாக இரு
பெறுபவர் ஏற்காதபோது
அவரிடமே போய் சேரும்

உயர் பதவி
வகிப்பவர்களிடமிருந்து
நாடு எதிர்பார்ப்பது
நல்ல பண்பாட்டையும்,
உயர் கண்ணியத்தையும் தான்

தடம் புரளும்போது
தன் மானம் குறையும்
தேசத்திற்கும், மனித குலத்திற்கும்
இழிவைத் தந்து
அவமானப்பட வைக்கும்

அவமானங்களையும்
அவமரியாதைகளையும் கண்டு
அஞ்சாமல் ,தாங்கிக்கொண்டால்
நமது இலக்குகளை
நாம் எட்டமுடியும்

எழுதியவர் : கோ. கணபதி. (17-Nov-19, 7:10 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 72

மேலே