பனுவல் பயன்தேர் அறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே – நன்னெறி 32

நேரிசை வெண்பா

பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ்ஒன்(று) உயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழ்ஒன்(று) இலதாயில் தான். 32 - நன்னெறி

பொருளுரை:

வைரம் பாய்ந்த திண்மை கொண்ட உயர்ந்த கதவும் தாழ்ப்பாள் இல்லையென்றால் வலுவில்லாததே.

நன்னெறிகளை உடையவளே! அது போல சொல்லப்படும் நூல்களின் பயனை அறியாதவர் செய்யும் அறங்களும் பயனற்றதே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-19, 7:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே