உருகுதடி என் இதயம் உன்னால் 555
உயிரே...
நான் உன்னை
நேசித்தது
தவறில்லை...
நீ என்னை
வெறுத்ததும் தவறில்லை...
என்னுடன் நீ எப்போதும்
இருக்க நினைத்தது தவறு...
நமக்காக நான்
வாழநினைத்தேன் மண்ணில்...
இத்தனை நாட்கள் என்னை
காத்திருக்க வைத்தாய்...
காரணம் சொல்லாமலே
காத்திருக்க வைத்தாய்...
இன்று காரணம்
இல்லாமலே...
காதல் கோட்டையை
இடித்து செல்கிறாய்...
எலும்பு கூடுகளுக்கு நடுவில்
உருகி கொண்டு இருக்குதடி...
உன்னை நேசித்த
என் இதயம்...
உன் நினைவால்
தினம் தினம்.....