காதல்

நீ என்னை வசீகரிப்பதை...
உன் அழகு என்னை கவர்ந்து இழுப்பதை..
மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன்..

எனக்கான உன் சேவை குறித்து
உலகில் எந்த ஒரு மொழியிலும்
சொல்ல ஒரு வார்த்தை இல்லை...

உன்னிலிருந்து வரும்
இனிய குரல்,
என் செவிகளுக்கு அமிர்த மழை...

உன்னை நான் தொடும்போது
எனக்குள் ஏற்படும் சிலிர்ப்பு
உன்னுள் நான் ஐக்கியமான பின்
யாரேனும் என்னை அழைத்தால்
எனக்குள் ஏற்படும் உலக மகா வெறுப்பு...

என்னுயிர் உறவினர்கள்,
அதற்கும் மேலான தோழர்கள்,
என் செல்ல நாய்க்குட்டி, கிளிகள்
என்று என்னை சுற்றியிருக்கும்
எவரும் எதுவும்
என் கண்களுக்குத் தெரியாமல்
உன்னையே
என் மனம் சுற்றி சுற்றி வருகிறதே....

ஆனால்,
என்னை அழிக்கும் எமனே நீதான்
என்று என் ஆழ்மனம் சொன்னாலும்
என் விளையாட்டு புத்தி
உன்னை மட்டுமே கொண்டாடுகிறதே
ஏன் இப்படி ஓர் விபரீதம்??

என் பிரியமான
அலைபேசியே!! (செல்போன்)....

எழுதியவர் : சாந்தி ராஜி (27-Nov-19, 12:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே