உனக்கு அழகூடதெரியுமா

கால் கடுக்க நின்றேன்,
கண்டுகொள்ளாமல் போனாய்....

கல்லறையாய் நிற்கிறேன்,
கண்ணீர் விடுகிறாயடி...

மலர்தூவி யாசித்தேன்.... மறுத்தாய்...
மலர்தூவி வந்து புதைத்திருக்கிறார்கள்....
மண்ணுக்குள்....

என்னவளே...
உனக்கு அழத்தெரியும் என்பதை கூட
இப்போதுதான் உணர்கிறேன ...

யார் அங்கே ...
இவளை அழைத்துச்செல்லுங்கள்.
என் கல்லறையாவாது மிச்சமிருக்கட்டும்...

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (13-Dec-19, 7:56 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
பார்வை : 1154

மேலே