பூவோடு பூவாகி மலர்ந்தாளோ பூவையிவள்

வண்டுக்குத் தேன்
சுரக்காத இதழ்கள் /
பூச்செண்டுக்கும் பொறாமை
மூட்டும் வதனம் /
உதிரிப் பூக்களும்
முகம் திருப்பும் /
உறவாட வரும்
தேனீரும் வியக்கும் /
இவள் பூவுக்கும்
பூவரசியோ இல்லை/
ஊர்ந்திடும் பூநாகம்
தீண்டிடாத பேரரசியோ?
பனித்துளி தொட்டு
மலர்ந்த மொட்டா?
பருவம் கண்டு
விரிந்த மொட்டா?
பூப் பறிக்க வரும்
புயலும் திகைக்குமே/
பூவாசம் சுமந்து
செல்ல மறக்குமே/
பெண் அழகு
கண்ட வண்ண /
மலரும் பொறாமையில்
நாணி சருகாகிடிடுமே/
காமக் கவிதைகளை
கவிஞனுக்கு அளிக்கும்/
காமதேனு பூவை
இவள் தானோ?
பூவோடு பூவாகி
மலர்ந்தாளோ பூவையிவள்/
பிரமன் படைப்பில்
ஓர் அதிசையமாய்/